பச்சைக் குழந்தை யடி கண்ணிற்
பாவை யடி சந்திரமதி
இச்சைக் கினிய மது; - என்றன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே - நல்ல
நாகமணி யுள்ள தென்பார்;
துச்சப்படு நெஞ்சிலே - நின்றன்
சோதி வளரு தடீ! பேச்சுக் கிடமே தடி! - நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சரிய மாயை யடி! - என்றன்
ஆசைக் குமரி யடி!
நீச்சு நிலை கடந்த - வெள்ள
நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல்,
தீச்சுடரை வென்ற வொளி - கொண்ட
தேவி! நினை விழந்தே னடி! நீலக் கடலினிலே - நின்றன்
நீண்ட குழல் தோன்று தடி!
கோல மதியினி லே - நின்றன்
குளிர்ந்த முகங் காணு தடி!
ஞால வெளியினி லே - நின்றன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே - நின்றன்
காதல் விளங்கு தடி

சி.சுப்ரமணிய பாரதியார்