இமைகள் வருடும்
உன் இதழ்கள்;
அக்கினித் தென்றலாய் விரவும்
உன் மூச்சுக்காற்று;
உன்னிரு கைகளின்
தீண்டல்;
தீண்டலினும்
என்னைக் கொல்லும்
உன் பார்வை;
ஏங்குகிறேன் உன் பார்வைக்கே...
என் கனவல்ல
என் நினைவெல்லாம் நீயே,
நிஜத்திலும் நீயே...
நான்
உனதருகே
உணருகிறேன்
உன் என்னை...

பால.அபி