திரையில் மலர்ந்த கவிதைகள்
நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014 09:10
- எழுத்தாளர்: வைரமுத்து
- படிப்புகள்: 2085
படம்: கடல்
நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் என் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம், வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில் நிழல் வந்து சேர்ந்து நின்னுடுச்சே
அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலையே குனியலையே
கொடகம்பி போல மனம் குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ளே...
பச்சி ஓரங்கிடிச்சு பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்துமேல இல கூட தூங்கிருச்சு
காசநோய் காரிகளும் கண்ணொறங்கும் வேளையிலே
ஆச நோய் வந்த மக அரை நிமிஷம் தூங்கலையே
நெஞ்சுக்குள்ளே...
ஓ...ஒரு வாய் இறங்கலையே உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே
ஏழை இளஞ்சிருக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே
நெஞ்சுக்குள்ளே...
வெள்ள பார்வை வீசிவிட்டீர் முன்னாடி...
நெஞ்சுக்குள்ளே...
- வைரமுத்து
Add a commentகாதல் செய், காதல் செய்
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014 11:02
- எழுத்தாளர்: நா முத்துகுமார்
- படிப்புகள்: 1641

கண்ணில் பட்டதை காதல் செய்.
உன்னில் உள்ளதை காதல் செய்.
மஞ்சள் வெயிலை காதல் செய். ஹோய்..
வெள்ளை மழையை காதல் செய்.
சிட்டுக்குருவி கூட்டை,
தாடி வைத்த ஆட்டை காதல் செய்.
வெள்ளிப் பனிமூட்டம்,
விண்ணில் மேகக்கூட்டம் காதல் செய்.
ஓடும்.. ஆற்றை.. நீ காதல் செய்.
போகும்.. ஊரை நீ காதல் செய், காதல் செய்.
கண்ணில் பட்டதை காதல் செய்.
உன்னில் உள்ளதை காதல் செய்.
கால்மிதித்த இடத்தில் பாத சுவட்டை அழிக்கும் அலைகள்,
டாட்டா காட்டும் குழந்தை நேசம்,
காற்றில் வரும் மீன்கள் வாசம்
இதையும் காதல் செய்.
கண்ணில் பட்டதை காதல் செய்.
உன்னில் உள்ளதை காதல் செய்.
நார் ஆகும் வாழ்வில் பூத்துச்சிரிக்கும் வாழைத்தோட்டம்.
படித்துறை ஒற்றை கொலுசை,
ஆண்டன முளைத்த குடிசை
இதையும் காதலிப்போம்.
உன்னில் உள்ளதை காதல் செய்.
சிட்டுக்குருவி கூட்டை,
தாடி வைத்த ஆட்டை காதல் செய்.
வெள்ளிப் பனிமூட்டம்,
விண்ணில் மேகக்கூட்டம் காதல் செய்.
ஓடும்.. ஆற்றை.. நீ காதல் செய்.
போகும்.. ஊரை நீ காதல் செய், காதல் செய்.
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014 10:08
- எழுத்தாளர்: வைரமுத்து
- படிப்புகள்: 1609
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தரீயா ஒஹோ
அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பகுளம்
நீரோடு நீரு சேரட்டுமே
அழகர் மலைக் கோயில் யானை வந்து
அல்வாவை தின்பது போல்
என் ஆச உன்ன தின்னட்டுமே
ஒத்தைக்கு ஒத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அரிக்குது நெத்திகுள்ள
துடிக்குது
வெள்ள முழி வெளிய தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது ஈரக்குலை நடுங்குது
சின்ன சின்ன பொய்யும் பேசுற
ஜிவ்வுனுதான் சூடும் ஏத்துற
நீ பார்த்தாக்கா தென்னமட்ட
பாஞ்சாக்கா தேக்கங்கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே
நீ தேயாத நாட்டுக்கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
என் ராசி என்றும் மன்மதனே
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்குற என்ன செய்ய நினைக்குற
அம்பு விட்டு ஆள அடிக்குற
தும்ப விட்டு வால பிடிக்குற
தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே
எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா
கண்டாங்கி கண்டாங்கி
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
- வைரமுத்து
Add a commentயார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது?
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 02 செப்டம்பர் 2014 15:34
- எழுத்தாளர்: நா. முத்துக்குமார்
- படிப்புகள்: 1871
படம் : தலைவா
ஆ: யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
பெ: யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆ: நகராமல் இந்த நொடி நீல
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
பெ: குளிராலும் கொஞ்சம் அணலாலும்
பின்பு நெருக்கம் தான் கொல்லுதே
ஆ: எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே...
(ஆ: யார் இந்த)
தீர தீர ஆசையாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தல்லி நிர்க்கலாம்
பெ: என்னை நானும் உன்னை நீயும் தோர்க்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
ஆ: என்னாகிறேன் இன்று யேதாகிறாய்
பெ: எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
ஆ: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
அது பறந்தோடுது வானிலே...
(பெ: யார் எந்தன்)
ஆ: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையாய் விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
பெ: வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
ஆ: கண்ஜாடையில் உன்னை அரிந்தேனடி
பெ: என் பாதையில் இன்று உன் காலடி
ஆ: நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்த்ததும்
நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி
(ஆ: யாரு இந்த)
பெ: யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆ: நகராமல் இந்த நொடி நீல
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
(பெ: குளிராலும்)
ஆ: எந்தன் ஆறானது இன்று வேரானது
வண்ணம் நூறானது வானிலே...
- நா. முத்துக்குமார்
Add a commentஒரு பாதி கதவு
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2012 00:00
- எழுத்தாளர்: நா முத்துகுமார்
- படிப்புகள்: 2558
திரைப்படம்: தாண்டவம்
நீ என்பதே... நான் தான் அடி ...
நான் என்பதே... நாம் தான் அடி...
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்
நீ என்பதே... நான் தான் அடி ...
நான் என்பதே... நாம் தான் அடி...
இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சோர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதில் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பெய் பூட்டு போனது
வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே
ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்
ஓ... இன்றேனே நம் மூச்சும்
மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவு இல்லாமல் ஆனதே
இனி மேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே
- நா முத்துகுமார்
Add a commentஎன் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
- விவரங்கள்
- பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2012 18:00
- எழுத்தாளர்: விவேகா
- படிப்புகள்: 1961
படம் : நண்பன்
என் ஃப்ரண்ட போல
யாரு மச்சான் - அவன்
டிரெண்ட எல்லாம்..
மாத்தி வச்சான்
நீ எங்க போன
எங்க மச்சான் - என
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்
தோழனின் தோள்களும்
அன்னை மடி - அவன்
தூரத்தில் பூத்திட்ட
தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்துப்படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான்மேகம் போல நின்றோம்
புது பாதை நீயே போட்டுத்தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயைத்தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்
- விவேகா
Add a comment