- விவரங்கள்
-
பிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்
-
வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 29 நவம்பர் 2010 18:00
-
எழுத்தாளர்: வைரமுத்து
-
படிப்புகள்: 2533
படம் : காக்கி சட்டை
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையே
அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
லல லல லலலா
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
லல லல லலலா
தோளிலும் என் மார்பிலும்
கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது ஓய் ஓய்
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்
கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
லல லல லலலா
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
லல லல லலலா
வாழ்கவும் இவ்வையகம் யாவுமே
என் கையகம் நீதான் தந்தாய்.... ஓ.. ஓ...
- வைரமுத்து