கவிஞர் பக்கம்
வைரமுத்து
- விவரங்கள்
- பிரிவு: கவிஞர் பக்கம்
- வெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 13 ஆகஸ்ட் 2009 13:53
- எழுத்தாளர்: இணைய மேலாளர்
- படிப்புகள்: 5789
தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டத்தில் உள்ள வடுக பட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்த வைரமுத்து திரையுலகிலும் இலக்கிய உலகத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை வெகு சீக்கிரமாக அமைத்துக் கொண்டார்.
"கள்ளிக்காட்டு இதிகாசம்" என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும், முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா), ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை), கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...), சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்) மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..) ஆகிய பாடல்களுக்காக ஐந்து முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். 1990-ம் ஆண்டில் கலைமாமணி விருதும் இவருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருடைய மகன் கபிலன்.
படைப்புகள்
கவிதைத் தொகுப்பு
- வைகறை மேகங்கள்
- சிகரங்களை நோக்கி
- திருத்தி எழுதிய தீர்ப்புகள்
- தமிழுக்கு நிறமுண்டு
- இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
- இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
- சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
- இதனால் சகலமானவர்களுக்கும்
- இதுவரை நான்
- கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
- பெய்யென பெய்யும் மழை
- நேற்று போட்ட கோலம்
- ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
- ஒரு மெளனத்தின் சப்தங்கள்
நாவல்
- தண்ணீர் தேசம்
- கள்ளிக்காட்டு இதிகாசம்
- கருவாச்சி காவியம்