தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தொடரும் உரையாடல்

இரா. பி
மறுபடியும் உயிர்த்தெழுந்து!
உணர்வுகளின் ஒரு பகுதியில், உறவுகளுடன்!
ஒரு உரையாடல் கொண்ட!
கண நேரத்தில்!
காலன் தவறை உணர!
பலியான கனவு !
தொலைந்தது எதுவோ!
தொலைத்தவர் எவ்வழியோ!
வாழ்க்கையை தொலைக்க முயன்று!
தொலைந்த நிழல் !
தொலைந்த தோற்றம் தேடி!
தொடர்ச்சி, தோல்வி அல்ல!
தொடரும் பயணமே முடிவு !
உண்மை தெளிய, எதுவும் அன்றி பொய்யாக!
விழிப்பின் விளிம்பில் ஒரு உரையாடல்!
எவரிடமோ என்பதல்லாமல், பயணங்கள் தெளிவற்று!
வெளிச்சத்தில் நிலையற்று, இருட்டின் தேடலில்!
மறந்து போன, மறைக்க நினைத்த!
வாழ்வின் முடிவில் மரணம்

இயலாமை

இரா. பி
கண் முன்னே கொடூரங்கள்!
அன்றாட வாழ்வில் அத்தியாயமாகி!
இயலாமை எனும் அரணின் பின் மறைந்து!
இரக்கம் ஒரு சொல்லாக!
நீதி ஒரு துணுக்காக!
மனிதம் ஒரு புறம்; மனிதன் மற்றொரு புறம் !
காலத்தின் போக்கில் வாழ்வைக் களித்து!
அநீதி கண்டு பொங்கி எழுவது அநீதி என்று!
நீதி அளக்கும் தராசில்!
ஒரு புறம் கனம்; மறுபுறம் கனக்கும் மனம் !
எப்போதாவது என ஒரு சொல் சாபத்துடன்!
வாழ்வில் முற்றுப்புள்ளி அற்று!
தொடரும் பல சாபங்கள்!
இயலாமைதான் வாழ்க்கையோ?!

பயணம்

இரா. பி
காலத்தின் படிகளில் பின்னோக்கிச் சென்று!
உற்று நோக்கி, உண்மையான உருவத்தை!
ஒரு கேள்வி கேட்க!
கண் விழித்து!
கனவுகளைத் தொலைத்து!
தொடங்கும் ஓர் ஆன்மீகப் பயணம் !
நிகழ்கால என்னை, கடந்த கால நான்!
எதிர் கொண்டு,!
பேசத் தயங்கி,!
உள்ளம் நடுங்க,!
கேட்ட ஒரே கேள்விக்கு விடை என்ன?!
எங்கே என்னைத் தொலைத்தாய்? !
விடை தேடி மீண்டும் தொடங்கும்!
ஆத்மார்த்த யாத்திரை!
கட்டுங்கடங்காத காலம்!
எட்டுத்திக்கிலும் எண்ணம்!
தட்டுத்தடுமாறி தொடங்கிய!
வாழ்வின் முடிவில் பயணம் !
எவனோ ஆகும் முயற்சியில் முதல் தோல்வி!
இவனோ எனும் கேள்விக்கு விடை தேடி!
அவனும் அப்படித்தான் எனும்!
சமூக விதிக்குட்பட்டு!
வரையறை தாண்டியவர் கண்டு பெருமூச்சு விட்டு!
இதுதான் எனும் தொடக்கத்தில் முடிவுறும் பயணம்!

என் சீருடைப்பிறையே

கிண்ணியா பாயிஸா அலி
சீருடைப்பிறையே!!
எனதில்லத்துமுற்றத்தில்!
நெல்லுமணி பொறுக்கும்!
சின்னச்சிட்டுக் குருவியாய்!
பள்ளிநேரமதில் நீ……!
சாடிகொண்ட செடிமலர்களுக்குள்ளே நெடிய!
வாயுறுப்பிறக்கி அமுதமுறிஞ்சும்!
வண்ணத்துப்பூச்சியே!!
கண்ணாடித்தொட்டியுள் பச்சைப்புழுவாய்!
வளைந்து நெளியும்!
வலிஸ்நேரியப் பற்றைக்குள்!
ஒளிந்து விளையாடும் பொன்மீன்குஞ்சே! !
குப்பை கிளறிக்குறுணல்!
கொறிக்குமென் வெண்கோழிக்குஞ்சே!!
மாடத்து மினாரங்களில்!
சடசடத்துப் பறக்கும் வெள்ளிப்புறாவாய்!
பள்ளி மைதானமதில் படபடத்துத்திரிபவளே!!
சீரூடைப்பருவமதில் நான்!
சுவாசிக்கமுடியாதுபோன!
சுதந்திர வானங்களுக்கான!
அத்தனைசிறகுகளையும்!
மொத்தமாய்விரித்திருக்கிறேன்!
உன்!
இலட்சியத்தேடலுக்காய்!!
புரிந்துகொண்டேன்!
சிரிப்பாலானவளே!!
சீருடைப்பிறையே!!
பேனாபிடித்த உன்!
சின்ன விரலிடுக்கின்!
பெருவெளிகளுக்குள்ளே!
எட்டா முடிவிலித்தூரத்தில்!
விரிந்து வியாபித்துக் கிடக்கின்றன!
சிகரக் கனவுகள்.!
எனவேதான்!
இறைஇறைஞ்சலுக்காய்!
இருகரமுயர்ந்திடக்!
காத்திருக்கிறேனம்மா உன்!
எல்லாவிதத்தேடல்களுக்குமான!
அடைவுமட்டங்களுக்காய்…….!!
என்!
தேர்ர்ச்சித் திட்டங்களோடும்!
உன்னதமான!
தாய்மையின் பரிவுகளோடும்

நகர்வு!

கலாநிதி தனபாலன்
நகரும் போதுதான்!
நதி அழகு!
நடக்கும் போதுதான்!
வாழ்க்கை அழகு!
நடந்தேன் நடந்தேன்…!
ஊரை விட்டு !
உறவை விட்டு!
ஒரு நகர்வு!
நடந்தேன் நடந்தேன்!
ஈழம் விட்டு !
இருந்த சொந்தம் விட்டு!
இன்னொரு நகர்வு!
நடந்து கழைத்து!
நின்று நினைத்துப்!
பெருமூச்சு விட்டேன்!
அப்போது தெரிந்தது!
வாழ்வின் அருமை!
அதற்குள் அடுத்தடுத்த நகர்வுகள்!
காலநதியில் கால்பதித்து!
கல்வி தேவதையோடு!
கைகோர்த்து!
கனதூரம் நடந்தேன்!
ஓரமாய் ஒளிர்ந்தது!
ஒரு புதிய விடியல்!
விடியலைக்கண்டு!
வட்டம் விட்டு!
வெளியே வந்து பார்த்தேன்!
வாழ்க்கை வனப்புடையதாயிற்று!
நடக்கும் போதுதானே!
வாழ்க்கை அழகு!
நம்பினேன் நடந்தேன்!
நடந்தது வாழ்க்கை!
நலமாக.!

நினைவுகளின் பயணம்

தருணா. கே
நம் காதல் கதையின் கடைசி பக்கம் இது
எதிர்பாராம் வந்த காதல் புரியாதது
முதலில் நீ சொல்வதை இல்லை நான் சொல்வதை ஏதோ நம்மை தடுக்கிறது

நும் காதல் ஒரு முடியாத காவியம்
புரிந்துகொள்ள முடியாத ஓவியம்

நான் யாரோ போல் உன்னை பார்க்க
ஏதோ சொல்ல நெஞ்சம் ஏங்க
வார்த்தை எல்லாம் வாயில் தேங்கா
மௌனமாக கடந்து போக

சொல்லாத வார்த்தைகள் இதயத்தில் உருளுதே
தீராத எண்ணங்கள் என்னில் நிறையுதே

நீ வேண்டாம் என்று தோணும்போது கண்முன் நிற்கிறாய்
மறப்பேன் என்று எண்ணும்போது நினைவில் வருகிறாய்

நாம் சேர்ந்து சென்ற நாட்கள் எல்லாம் கண்முன் தெரியுதே
கைகோர்த்து கொண்டு பேசறியதெல்லாம் காதில் ஒலிக்கிறதே

நீ கொடுத்த வெப்பம் என்றும் என்னுடன் இருக்கும்
நான் மறைத்த வெட்கம் என்றும் உன்னுடன் இருக்கும்

இது எப்போது முடியும் முடிவே இல்ல இந்த நினைவுகளின் பயணம்....

ஜன்னல்

செ.இராமதனவந்தினி
என் வீட்டு ஜன்னலுக்குள்
சிறைபட்ட
நிலவை விடுவிக்க
சூரியனைத் தவிர வேறு
யாரால் முடியும்???

திரைகள்

தென்றல்.இரா.சம்பத்
கலப்புத் திருமணம் பற்றி!
கருத்தாழத்தோடு !
மேடையில் முழங்கிய பெரியார்வாதி....!
வீட்டிற்க்கு வந்தும் விடவில்லை!
பொறிந்து தள்ளினான்!
மகளைப்பார்த்து....!
நாமென்ன சாதி...!
ஆவனென்ன சாதி...!
இந்த கல்யாணம் நடக்காதென்று...!

என் சுவாசம்!

கோவை. மு. சரளாதேவி
உன் வருடலின் சிலிர்ப்பில்!
சிவந்துபோகிறேன் சிலநேரம்!
எத்தனைபேர் என் அருகில் இருந்தாலும்!
நீ இல்லாத அந்த நிமிடங்கள் சூனியமாய் !!
மெல்ல என் தலை கோதி!
மேனி முழுதும் வியாபித்திருந்த கணங்கள்!
மெல்ல சுயம் இழந்தேன்!
சுற்றம் அறியாமல் !!
என் தனிமையின் துணையாய்!
என்னை தாலாட்டும் அன்னையாய்!
என் தாகம் தணிக்கும் தண்ணீராய்!
எனக்குள் நிறைத்து இருகிறாய் !!
உனக்கான எதிர்பார்ப்பிலேயே!
கரைந்துபோகிறேன்!
ஒருகணம் நீ இல்லை என்றாலும்!
என் உயிர்பிரியும்

கறை

காருண்யா கதிர்வேற்பிள்ளை
கால வெள்ளம்
        கவலை அழுக்கை
கழு‌விச்  செல்லினும்

கண்ணீரும்
            கரைக்க இயலா
    கறைகளை என் செய்ய ..