கவிதை
விடியல்
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: புதன்கிழமை, 27 ஜூலை 2016 18:22
- எழுத்தாளர்: நித்ய ஜெய ஜோதி
- படிப்புகள்: 3442
விடியல்
நீல வானில் உலா வந்த நிலவு
அழைத்துப் பேசியது பூங்காற்றை.
விசுக்கென்று கிளம்பியது காற்று
பசும் மரக்கிளைகளில்
ரகசியப் பேச்சு.
சருகுகள் பறந்தன
ஆற்றுநீர் விழித்துக்கொண்டாட்டம்
மலையருவி வீழ்ந்த இடமெல்லாம்
முத்துப் பரல்களாய்
நிலாத்துண்டுகள்
பூக்கள் எல்லாம் சோம்பல் முறித்தன.
விடியப் போகும் செய்தியை
இப்படிச் சொல்லி அனுப்பியது
குறும்பு நிலா.
சூரியனின் வருகையை-
'தாமரைக்கு'
-நித்ய ஜெய ஜோதி